ஃபிக்ஹ் பாகம் – 6
உளூவின் சுன்னத்துக்கள்
விரல்களையும் குடைந்து கழுவுதல் :
❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள்.
மூன்று முறை கழுவுவது :
❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட அதிகமாக எவர் செய்கிறாரோ அவர் தவறிழைத்து விட்டார், எல்லை கடந்து விட்டார், அநியாயம் செய்து விட்டார் (அஹ்மத், நஸாயீ)
❖ உஸ்மான் (ரலி) – நபி(ஸல்) மூன்று முறை கழுவி உளூ செய்தார்கள் (முஸ்லீம்).
❖ நபி(ஸல்) ஒரு முறையும் உளூ செய்துள்ளார்கள் இரு முறையும் உளூ செய்துள்ளார்கள் மூன்று முறையும் உளூ செய்துள்ளார்கள்.
❖ மற்ற உறுப்புகளை மூன்று முறை கழுவினாலும் தலையை தடவுதல் காதை தடவுதல் ஒரு முறை தான் நபி(ஸல்) செய்துள்ளார்கள்.
கருத்துரைகள் (Comments)