உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9

உளூவின் சுன்னத்துக்கள்

முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்:

 நபி  (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள்.

 அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டபோது இது தான் ஆபரணங்கள் அணியக்கூடிய இடம் என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத் – இது அபூஹுரைரா (ரலி) வின் கருத்தாகும்  )