ஃபிக்ஹ்
சஜ்தா சஹ்வு
பாகம் – 7
1 – நபி (ஸல்) சுருக்கமாக தொழுதபோது; விட்ட ரக்காத்துகளை மீண்டும் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள்
2 – நபி (ஸல்) அதிகமாக தொழுதபோதும் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள்
அத்தஹிய்யாத் விடுப்பட்டுவிட்டால்
ابن بحينة: (أن النبي صلى اللَّه عليه وآله وسلم صلى فقام في الركعتين فسبحوا به فمضى
فلما فرغ من صلاته سجد سجدتين ثم سلم
↔ فقام في الركعتين
இரண்டு ரக்காத்துக்களில் எழுந்து விட்டார்கள்
↔ فسبحوا به
(நபி ஸல்) வுக்கு தஸ்பீஹ் சொல்லி சுட்டிக்காட்டப்பட்டது
↔ فمضى
(நபி ஸல் கவனிக்காமல்) போய் விட்டார்கள்
↔ فلما فرغ من صلاته
தொழுகையை முடித்த போது
↔ سجد سجدتين ثم سلم
இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பிறகு ஸலாம் கொடுத்தார்கள்
إذا قام أحدكم من الركعتين، فلم يستتم قائما فليجلس، فإذا استتم قائما فلا يجلس، ويسجد
سجدتي السهو
↔ إذا قام أحدكم من الركعتين
உங்களிலொருவர் இரண்டு ரக்காத்தில்(அத்தஹிய்யாத்தில் உட்காராமல்) எழுந்தால்
↔ فلم يستتم قائما فليجلس
நிற்பது முழுமையடையவில்லையென்றால் அவர் உட்காரட்டும்
↔ فإذا استتم قائما فلا يجلس
அவர் முழுமையாக \நின்று விட்டால் உட்கார வேண்டாம்
↔ ويسجد سجدتي السهو
அவர் சஜ்தா சஹ்வு வை செய்யட்டும்.
🌷 முகீரா (ரலி) – நபி (ஸல்) -உங்களிலொருவர் இரண்டு ரக்காத்திற்கு பிறகு அத்தஹிய்யாத்தில் உட்காராமல் எழுந்து முழுமையாக எழும் முன் ஞாபகம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும் முழுமையாக எழுந்து விட்டால் சஜ்தா சஹ்வு செய்துக்கொள்ளட்டும் ( அஹ்மத்,அபூதாவூத், இப்னு மாஜா )
கருத்துரைகள் (Comments)