ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 71

ஹதீஸ் பாகம்-71

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عبد الله بن عمرو يقول قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون

من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – நபி (ஸல்) – எந்த முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்கள் தான் முஸ்லீம்  அல்லாஹ் தடுத்ததை வெறுப்பதற்காக யார் ஹிஜ்ரத் செய்தாரோ அவர் தான் முஹாஜிர்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 70

ஹதீஸ் பாகம்-70

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

أبا هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إنما مثلي

ومثل الناس كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حوله جعل الفراش وهذه

الدواب التي تقع في النار يقعن فيها فجعل ينزعهن ويغلبنه فيقتحمن فيها فأنا آخذ

بحجزكم عن النار وهم يقتحمون فيها

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எனது உதாரணமும் மக்களுடைய உதாரணமும் நெருப்பு மூட்டிய ஒரு மனிதனின் உதாரணமாகும் அவன் தனக்காக நெருப்பை மூட்டினான் அப்போது சுற்றியுள்ள இடங்கள் ஒளிர்ந்தன அப்போது ஈசல்கள் மற்றும் நெருப்பில் விழும் பூச்சுக்கள் ஒளியில் விழ பார்க்கும்போது அந்த பூச்சுக்கள் நெருப்பில் விழாமலிருக்க தட்டுகிறார்; ஆனால் அவர் எத்தனை முறை தடுத்தாலும் அவைகள் அதில் விழுந்து தாமே தம்மை பொசுக்கிக்கொள்கின்றன. நானும் நெருப்பில் விழாமல் உங்கள் இடுப்புக்களை பிடித்துக்கொண்டிருக்கிறேன் இருந்தும் என்னையும் மிகைத்துப்போய் நீங்கள் விழுகிறீர்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 69

ஹதீஸ் பாகம்-69

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الانتهاء عن المعاصي

பாவங்களிலிருந்து தவிர்ந்து(விலகிக்) கொள்ளல்

عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل ما بعثني الله

كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجا النجاء

فأطاعته طائفة فأدلجوا على مهلهم فنجوا وكذبته طائفة فصبحهم الجيش

فاجتاحهم

அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி)-நபி(ஸல்) – எனக்கும்; அல்லாஹ் எதைக்கொண்டு என்னை அனுப்பினானோ அதற்குமுள்ள உதாரணம்ஒரு சமுதாயத்தை எச்சரிக்க வந்த ஒரு மனிதருக்கு உள்ள உதாரணமாகும். அவர் அந்த சமுதாயத்திடம் ஓடி வந்து இந்த ஊரை தாக்குவதற்கு ஒரு  படை திரண்டு வருவதை எனது இரண்டு கண்களால் கண்டேன். நான் தான் உங்களுக்கு நிர்வானமாக எச்சரிக்கக்கூடியவன்நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள்; என்று எச்சரித்தவரைப்போலாவேன். அவர் சொன்னதை நம்பி அந்த ஊரில் சிலர் இரவோடு இரவாக அந்த ஊரை விட்டு சென்றவர்கள் தப்பிவிடுகிறார்கள் அவரை பொய்ப்பித்து ஊரிலேயே இருந்தவர்கள்; காலை நேரத்தில் அந்த படை வந்து கூண்டோடு அவர்களை அழித்து விடுகின்றனர்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 68

ஹதீஸ் பாகம்-68

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الخوف من الله

அல்லாஹ்வை அஞ்சுதல்

⚜ عن حذيفة عن النبي صلى الله عليه وسلم قال كان رجل ممن كان قبلكم يسيء

الظن بعمله فقال لأهله إذا أنا مت فخذوني فذروني في البحر في يوم صائف

ففعلوا به فجمعه الله ثم قال ما حملك على الذي صنعت قال ما حملني إلا مخافتك

فغفر له

ஹுதைபா (ரலி) – நபி (ஸல்)-உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் தான் செய்த அமல்களில் திருப்தி இல்லாததால் தன் குடும்பத்தை அழைத்துக்கூறினார் நான் மரணித்தால் என்னை எரித்துவிட்டு அந்த சாம்பலை சூடான ஒரு நாளில் கடலில் கலந்து விடுங்கள் என்றார்அதைப்போன்றே அவர்களும் செய்தார்கள்அல்லாஹ் அவரை ஒன்று சேர்த்து நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் உன் மீது நான் கொண்டுள்ள அச்சத்தின் காரணமாகவே இப்படி செய்தேன் என்று கூறினார் ஆதலால் அல்லாஹ் அவரை மன்னித்தான்.

⚜ அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – நபி (ஸல்) – உங்களுக்கு முன்னால் வாழ்த ஒரு மனிதர் அவருக்கு அல்லாஹ் சொத்தையும் பிள்ளைகளையும் கொடுத்திருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிய நேரத்தில் தன் பிள்ளைகளை அழைத்து அவர் கூறினார் எப்படிப்பட்ட தந்தையாக நான் உங்களுக்கு இருந்தேன் என்று கேட்டபோது சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அவர் ஆனால் இந்த தந்தை அல்லாஹ்விடம் செல்வதற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அல்லாஹ்விடத்தில் இந்த தந்தை சென்றால் அல்லாஹ் இவனை கடுமையாக தண்டிப்பான் அதனால் நான் மரணித்தால் என்னை எரித்து என் சாம்பலை அதை எடுத்து பொடியாக்கி அதை நன்றாக புயலடிக்கும் கொதிக்கும் நாளில் அதில் அந்த துகள்களை இட்டு விடுங்கள் என்று கூறினார். இறைவன் மீது ஆணையாக இப்படி செய்ய வேண்டும் என்று சத்தியமும் வாங்கிக்கொண்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள். பிறகு அல்லாஹ்; ஆகு என்று கூறினான் அந்த மனிதர் முழுமையாக வந்தார் அவரிடம் ஏன் இப்படி செய்தீர் என்று அல்லாஹ் கேட்டதும், உன்னை அஞ்சியதின் காரணமாக இப்படி செய்தேன் என்று அவர் பதிலளித்தார். அவரது அச்சத்தின் காரணமாக அல்லாஹ் அவரை மன்னித்து சொர்கத்திற்கு அனுப்பினான்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 42

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 42

81- اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، فلك الحمد ولك الشكر

💕 ஸுனன் அபூதாவூத்- 5073

من قال حين يصبح اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، لك الحمد ولك الشكر فقد أدى شكر يومه ، ومن قال مثل ذلك حين يمسي ، فقد أدى شكر ليلته

அப்துல்லாஹ் இப்னு கன்னாம் அல் பயாலீ (நபித்தோழர் என கருதப்படக்கூடியவர்) – நபி (ஸல்) கூறினார்கள் யார் “காலையை அடைகின்ற போது

اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، لك الحمد ولك الشكر

(நான் இந்த நேரத்தை எந்த நிஃமத்துக்களோடு அடைந்தேனோ அது உன்னிடமிருந்து மட்டுமே கிடைத்தது, உனக்கு எந்த இணையுமில்லை உனக்கே நன்றிகளும் புகழனைத்தும் உனக்கே உரியது) என்று சொல்கிறாரோ அவர் அன்றைய தினத்தின் நன்றியை முழுமையாக அல்லாஹ்வுக்கு தெரிவித்துவிட்டார். மாலையில் யார் இதை சொல்கிறாரோ அவர் அந்த இரவின் முழு நன்றியையும் அல்லாஹ்வுக்கு தெரிவித்து விட்டார்.

விளக்கம்: 

💕 ஷேக் அல்பானி (ரஹ்) இதை பலஹீனமானது என்று குறிப்பிடுகிறார்கள். அவரது மிக முக்கியமான மாணவர்களில் ஒருவரான சலீம் அல் ஹிலாலி என்பவரும் இதை பலஹீனம் என்றே கூறுகிறார்.

💕 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் தஹ்ரீமு தஹ்தீல் என்ற நூலில் இந்த ஹதீஸை பற்றி இமாம் அபூ zசூர்ஆ அர் ராஸீ அவர்கள் لا اعرف الا فى حديث واحد (இதில் வரும் அப்துல்லாஹ் இப்னு அம்பஸ்ஸா(مجهول الحال) என்பவர் இந்த ஹதீஸை தவிர வேறு எந்த ஹதீஸிலும் இடம்பெறவில்லை)என்று கூறியுள்ளார்.

💕 இந்த ஹதீஸையும் இவர் ஒருவர் மட்டுமே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகுறிப்பு:

💕 அறியப்படாதவர்களை ஹதீஸ் கலையில் இரண்டாக பிரிக்கலாம்  

  • مجهول الحال – அவரது தரம் பற்றிய எந்த விவரமும் இல்லாமலிருத்தல்
  • ومجهول العين – ஒருவரைப்பற்றிய தகவலே இல்லாமலிருத்தல்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 41

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 41

துஆ 80: 

80- اللهم إني أصبحت

أشهدك وأشهد حملة عرشك ، وملائكتك وجميع خلقك ، أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك ، وأن محمداً

عبدك ورسولك” ( أربع مرات )]

《☆》 سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ : اللَّهُم إِنَّا أَصْبَحْنَا

نُشْهِدُكَ ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ ، وَمَلائِكَتَكَ , وَجَمِيعَ خَلْقِكَ ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ ، وَأَنَّ

مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ ، إِلا أَعْتَقَ اللَّهُ رُبُعَهُ فِي ذَلِكَ الْيَوْمِ ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ مِنَ النَّارِ ، وَمَنْ قَالَهَا

أَرْبَعَ مَرَّاتٍ أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ فِي ذَلِكَ الْيَوْمِ

அனஸ் (ரலி) – நபி (ஸல்) – காலைப்பொழுதை அடைகிற நேரத்தில் யார்

اللَّهُم إِنَّا أَصْبَحْنَا نُشْهِدُكَ ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ ، وَمَلائِكَتَكَ , وَجَمِيعَ خَلْقِكَ ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلا أَنْتَ وَحْدَكَ لا

شَرِيكَ لَكَ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

என்று கூறுகிறாரோ அன்றைய நாள் முழுவதும் அவர் எந்த பாவம் செய்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான். மாலை நேரத்தை அடையும்போது கூறினால் அந்த இரவில் அவர் எந்த பாவம் செய்திருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் (திர்மிதி – திர்மிதி இமாம் இந்த ஹதீஸை கரீப் என்று கூறுகிறார்கள்)

💕 அபூதாவூதில் இதில் இவ்வாறு இடம்பெறுகிறது இதை 2 முறை யார் சொல்கிறாரோ அவரை அல்லாஹ் அரைவாசி நரகத்திலிருந்து விடுதலை செய்து விடுவான். யார் 4 முறை சொல்கிறாரோ அவர் நரகிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுவார் என்று வருகிறது   

💕 இந்த ஹதீஸ் ஸுனன் திர்மிதி யில் இடம் பெறுகிறது. இதில் பகிய்யத் இப்னுல் வலீத் என்பவர் இடம்பெறுகிறார் அவர் மறைத்து அறிவிப்பவர். அவர் முஸ்லீம் இப்னு ஸியாத் என்பவரிடமிருந்து அறிவிக்கிறார். அவர் அறியப்படாதவர்.

💕 இதே செய்தி அபூதாவூத் இல் இடம்பெறுகிறது இரண்டிலும் அனஸ் (ரலி) வழியாக தான் இந்த செய்தி வருகிறது. இந்த அறிவிப்பில் அப்துல் ரஹ்மான் இப்னு அப்துல் மஜீத் என்பவர் இடம் பெறுகிறார். ஐவரும் அறியப்படாதவராக இருக்கிறார்கள்

💕 இந்த இரண்டு அறிவிப்புகளையும் ஷேக் அல்பானி அவர்களே லயீப் ஆக்கியுள்ளார்கள்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 40

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 40

துஆ 79:

“اللهم أنت ربي لا إله إلا أنت خَلَقتني وأنا عَبْدُك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء[9] لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت

《☆》 حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ

ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)-நபி (ஸல்) பாவமன்னிப்பு தேடுதலிலேயே பிரதானமானது

⬇↔ اللَّهُمَّ أَنْتَ رَبِّي

அல்லாஹுவே நீயே என் ரப்பு

⬇↔ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை

⬇↔ خَلَقْتَنِي

நீ தான் என்னைப்படைத்தாய்

⬇↔ وَأَنَا عَبْدُكَ

மேலும் நான் உன்னுடைய அடிமை

⬇↔ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

நான் உனக்கு அளித்த வாக்கிலும் உடன்படிக்கையிலும் என்னால் முடிந்த அளவு இருந்துகொண்டிருக்கிறேன்

⬇↔ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

நான் செய்த தீங்குகளிலிருந்து பாதுகாப்பாயாக

⬇↔ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ 

என் மீது நீ செய்த நிஹ்மத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்

⬇↔ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي

நான் செய்த பாவங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்

⬇↔ فَاغْفِرْ لِي

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக

⬇↔ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறில்லை

இந்த துஆவை மாலை நேரத்தில் ஓதி காலை வரும்முன்  மரணித்தால் அவர் சொர்க்கம் நுழைவார். காலையில் இதை ஓதி மாலைக்குள் மரணித்தால் சுவர்க்கம் நுழைவார்.(புஹாரி)

ஹிஸ்னுல் முஸ்லிம் 39

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 39

துஆ 78 :

78- “اللهم بك أصبحنا وبك أمسينا[7] وبك نحيا وبك نموت وإليك النشور”[8]   وإذا أمسي فليقل : ” اللهم بك أمسينا، وبك أصبحنا، وبك نحيا وبك نموت، وإليك المصير “.

《☆》 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَصْبَحَ قَالَ: ((اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ))، وَإِذَا أَمْسَى قَالَ: ((اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) காலையை அடைந்தால்

⬇↔ اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا

அல்லாஹுவே உன்னைக்கொண்டே நாங்கள் காலையை அடைந்தோம்

⬇↔ وَبِكَ أَمْسَيْنَا

உன்னைக்கொண்டே மாலையை அடைந்தோம்

↔ وَبِكَ نَحْيَا،

உன்னைக்கொண்டே நாங்கள் வாழ்கிறோம்

↔ وَبِكَ نَمُوتُ 

உன்னைக்கொண்டே நாங்கள் மரணிக்கிறோம்

⬇↔ وَإِلَيْكَ النُّشُورُ 

உன் பக்கமே எமது மீளுதல்(மீண்டும் ஒன்று சேர்க்கப்படுதல்) இருக்கிறது

⬇↔ اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا

அல்லாஹுவே உன்னைக்கொண்டே நாங்கள் மாலையை அடைந்தோம்

⬇↔ وَبِكَ أَصْبَحْنَا

உன்னைக்கொண்டே காலையை அடைந்தோம்

(ஸுனன் அபூதாவூத்)

⬇↔ وإليك النشور

என்று நபி (ஸல்) இரு வேளைகளிலும் கூறியதாகவும்

⬇↔ وَإِلَيْكَ الْمَصِيرُ

என்று இரு நேரங்களிலும் கூறியதாகவும்

《☆》 காலையில் وَإِلَيْكَ الْمَصِيرُ  என்றும் மாலையில் وإليك النشور என்று சொன்னதாகவும்

《☆》 காலையில் وإليك النشور என்றும் மாலையில் وَإِلَيْكَ الْمَصِيرُ என்று சொன்னதாகவும் அறிவிப்புக்கள் இருக்கிறது.(இதுவே பொருத்தமான அறிவிப்பாக இருக்கிறது)

ஹிஸ்னுல் முஸ்லிம் 38

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 38

துஆ 77:

77- ” أصبحنا وأصبح الملك لله[4]، والحمد لله، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على

كل شيء قدير، ربِّ أسألك خير ما في هذا اليوم وخير ما بعده[5] وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما

بعده ربِّ أعوذ بك من الكسل وسوء الكبر، ربَّ أعوذ بك من عذابٍ في النار وعذاب في القبر”[6[ وإذا أمسي قال

ذلك أيضا : ” أمسينا وأمسي الملك لله “.

ஸஹீஹ் முஸ்லீம் 7083

↔ ربِّ أسألك

ரப்பே உன்னிடம் கேட்கிறேன்

↔ خير ما في هذا اليوم

இந்த பகலில் உள்ள நன்மைகளையும்

↔ وخير ما بعده

அதற்கு பின்னால் உள்ள நன்மைகளையும்

↔ وأعوذ بك

மேலும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்  

↔ من شر ما في هذا اليوم

இந்த நாளில் உள்ள தீங்கை விட்டும்

↔ وشر ما بعده

அதற்கு பின்னால் உள்ள தீங்கை விட்டும்

↔ ربِّ أعوذ بك من الكسل

சோம்பேறித்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் ரப்பே

↔ وسوء الكبر

முற்றிப்போன முதுமையிலிருந்தும்

↔ ربَّ أعوذ بك من عذابٍ في النار

ரப்பே நரக வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்

↔ وعذاب في القبر

மேலும் கப்ரில் உள்ள வேதனையை விட்டும்

ஹிஸ்னுல் முஸ்லிம் 37

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 37

துஆ 76:

بسم الله الرحمن الرحيم{ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ*اللَّهُ الصَّمَدُ*لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ} بسم الله الرحمن

الرحيم {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ * مِن شَرِّ مَا خَلَقَ *وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ * وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ * وَمِن

شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ } بسم الله الرحمن الرحيم{ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ * مَلِكِ النَّاسِ * إِلَهِ النَّاسِ *مِن شَرِّ الْوَسْوَاسِ

الْخَنَّاسِ * الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ * مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ }(ثلاث مرات )

சூரா 112,113,114 மூன்று முறை ஓதுதல்:

وعن عبد الله بن خبيب قال : خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب رسول الله – صلى الله عليه وسلم –

فأدركناه ، فقال : ” قل ” قلت : ما أقول ؟ قال : ” قل هو الله أحد والمعوذتين حين تصبح وحين تمسي ثلاث مرات

تكفيك من كل شيء ” رواه الترمذي وأبو داود والنسائي .

அப்துல்லாஹ் இப்னு ஹுபைப் (ரலி) – நபி (ஸல்) குல் ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்விதத்தைன்; காலையிலும் மாலையிலும் 3 முறை ஓதுதல்; உங்களுக்கு அனைத்து விஷயத்திற்கும் போதுமானது(ஸுனன் நஸயீ 5428)

இதே செய்தி உக்பத் இப்னு ஆமீர் (ரலி) வழியாக மிக பிரபல்யமான (முதவாத்திர்) செய்தி. ஆனால் இந்த செய்தியில் அஸீத் இப்னு அபூ அஸீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமான அறிவிப்பாளர். இவர் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறார்.

இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இந்த செய்தி இது போன்று இவர் வழியாக மட்டுமே வருகிறது. ஷேக் அப்துல் அஸீஸ் அத்தரீஃபீ போன்ற அறிஞர்கள் இந்த செய்தியை பலஹீனமானது என்று அறிவிக்கிறார்கள்