உசூலுல் ஹதீஸ் பாகம்-27 ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு: நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். அவர்கள் நிராகரித்தவை: திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள். உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள். திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை வெட்டவேண்டும் என்ற சட்டத்தை தோள்பட்டை வரை …
Tag: உசூல் ஹதீஸ்
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 26
உசூலுல் ஹதீஸ் பாகம்-26 🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர் தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட சில விஷயங்களில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட …
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 25
உசூலுல் ஹதீஸ் பாகம்-25 🌷 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு படி கொள்கையில் மாற்றம் செய்து ஹவாரிஜ் கொள்கையை …
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 24
உசூலுல் ஹதீஸ் பாகம்-24 🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள். 🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 23
உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் தான் எஞ்சியிருந்தார்கள். ❈ இந்த தோல்விக்கு பிறகு …
Nov 16










கருத்துரைகள் (Comments)